வவுனியாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம்(காணொளி)

278 0

வவுனியாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, அருந்ததி விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தனர்.

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் தமது அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பல்வேறு தரப்பினரையும் அழைத்து இடம்பெற்ற இக் கலந்துரையாடலிலேயே இம் முடிவு எட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் தொடர் உணவு தவிர்ப்பை மேற்கொண்ட பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியைடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.

எனினும் கொழும்பில் அரச தரப்பினருடம் இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் மீண்டும் வவுனியாவில் தொடர் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.