சர்வதேச மன்னிப்பு சபையின் வலியுறுத்தல்

256 0

இலங்கையில் உண்மை மற்றும் நீதி பொறிமுறைகளில் பங்குகொண்டு உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கின்றவர்களை தங்களது நாடுகளில் குடியேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இணங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இலங்கையுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இலங்கையின் நீதி உண்மை மற்றும் நட்டஈட்டு பொறிமுறைகள் சர்வதேச தரத்தையும் மீளிடம்பெறாமையையும் உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொழிநுட்ப உதவிகளை வழங்க வேண்டும்.

அதேவேளை, பாதிக்கப்படவர்களுக்கு உரிய பதில் வழங்கப்படுதல் வேண்டும்.

குறிப்பாக இந்த விடயங்களின் பங்களிப்புக்கான பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.