மேல் மாகாண முதலமைச்சர் குறித்து ஐ.தே.க. ஜனாதிபதியிடம் முறைப்பாட்டுக்கு முஸ்தீபு

222 0

மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, தொடர்ந்தேர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சனம் செய்து வருவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அலரிமாளிகையில் கூடியபோது ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் இது தொடர்பில் பிரதமரிடம் முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

பின்னர், இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய முன்வைத்துள்ள அறிவிப்பு தவறானது என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவர ஐ.தே.க. யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.