வவுனியா சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட தேவைக்குட்பட்டோரின் தகவல் திரட்டும் செயற்றிட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டடது.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டடது.
இதன்போது களப்பணியில் ஈடுபடும் 64 பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு லப் டப் கணணி வழங்கி வைக்கப்பட்டது.
வடக்கில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்த்திட்டத்தின் நான்காம் கட்டமாகவே நேற்று வவுனியாவில் இந்த நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடக்கு மாகண சபைசுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.திருவாகரன், வைத்தியர் கேசவன், ஆசிய மன்ற குழுத்தலைவர் சுபாகரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பவானி, பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள் பிராந்திய சேவைகள் பணிமணையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.