மூன்று குழுக்களுக்கு புதிதாக ஆறு உறுப்பினர்கள்

93 0

பாராளுமன்றத்தின் மூன்று குழுக்களுக்கு புதிதாக ஆறு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலக்கூடியதையடுத்து இடம்பெற்ற அறிவிப்பின்போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

சபாநாயகரின் அறிவிப்புக்கமைய கோப் குழு உறுப்பினர்களாக தயாசிறி ஜயசேகர மற்றும் மேஜர் சுதர்சன் தெனிபிட்டியவும் கோபா குழு உறுப்பினர்களாக பிரசன்ன ரணவீர மற்றும் எஸ் வேலு குமாரும் நியமிக்கப்படவுள்ளனர்.

அடுத்ததாக  அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக்   குழு உறுப்பினர்களாக  கலாநிதி நாலக கொடஹேவா மற்றும் சுமித் உடுகும்புரவும் நியமிக்கப்படவுள்ளனர்.