வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை

147 0

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (14) நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.