அரசாங்கத்திலிருந்து விலகுவது குறித்து தீர்மானிப்பது அமைச்சர்கள் அல்லர்- துமிந்த திஸாநாயக்க

260 0

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகிக் கொள்ளவுள்ளதாக சில அமைச்சர்கள் ஊடகங்களின் முன்னால் தெரிவித்து வரும் கருத்துக்கள், அவர்களது தனிப்பட்ட கருத்துக்களே எனவும் அவை கட்சியின் உத்தியோகபுர்வ அறிவிப்புக்கள் அல்லவெனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்குள் பங்காளியாகவுள்ள இருபெரும் கட்சிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொது மேடைகளில் வீரர்கள் போன்று பேசுவதனால் முடியாது எனவும் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்துக்குள் உள்ள கருத்து முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இரு கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகுவது குறித்த காலம், நேரம் என்பவற்றை தீர்மானிப்பது கட்சியின் தலைவர் ஜனாதிபதியும், கட்சியின் நிறைவேற்றுக் குழுவுமாகும் எனவும் அமைச்சர் துமிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.