போக்குவரத்து சேவை சங்கத்திடமிருந்து குற்றச்சாட்டு

289 0

இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

இந்த முறைமை காரணமாக இலங்கையின் போக்குவரத்து சபையின் செயற் திறன் தொடர்பில் நெருக்கடி நிலைமை ஏற்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, போக்குவரத்து சபையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தனியார் பிரிவுக்கு வழங்குவதற்கு போக்குவரத்துத் துறைசார்ந்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.