குடைக்குள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து வீதியில் சென்ற இளைஞன் மீது தாக்குதலை நடத்திய வன்முறை கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டை சந்திக்கு அருகில் நேற்று (நவ.10) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று குடையினுள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து வீதியில்நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

