வவுனியாவில் காட்டு யானை அச்சுறுத்தல் : அரச ஊழியர் வீட்டுத் திட்டத்தில் குடியிருக்க அஞ்சும் மக்கள்

50 0

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத் திட்டம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கு வசிக்கும் மக்களை அச்சுறுத்துவதால் அங்கு குடியேற மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அண்மைய சில தினங்களாக அரச ஊழியர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை பயன் தரும் மரங்களை துவசம் செய்து அங்கு குடியிருக்கும் மக்களை அச்சுறுத்தி வருகின்றது.

இதனால் அப்பகுதியில் குடியேறுவதற்கு மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சிலர் தமது குடியிருப்புக்களில் இரவில் தங்குவதற்கு அஞ்சி வேறு இடங்களில் இரவுப் பொழுதைக் கழித்து வருகின்றனர்.

காட்டு யானையின் அச்சுறுத்தல் குறித்து பொலிசார் மற்றும் கிராம அலுவலகருக்கு அறிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஓமந்தை அரச ஊழியர் குடியிருப்புக்குள் தற்போது காட்டு யானையின் அச்சுறுத்தல் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது.

இதனைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அங்கு குடியிருக்கும் மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.