போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

264 0

வெயாங்கொட – மாளிகாதென்ன பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட 20 வயதான இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது நாணய தாள்களை அச்சிட பயன்படுத்திய மடி கணினி மற்றும் அச்சியந்திரம் என்பன காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், ஐந்தாயிரம், ஆயிரம் மற்றும் நூறு ரூபா போலி நோட்டு இரண்டு என்பனவும் கைப்பற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.