பளையில் ஐவர் கைது

166 0

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரகளின் வீட்டை சுற்றிவளைத்த பளை பொலிஸார்  600 மில்லி கிராம் ஹெரோயினுடன் 5 பேரை  கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு,  தர்மபுரம், பளை தம்பகாமம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும்  தெரியவந்துள்ளது.

கைதானவர்களை இன்று   (10) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.