அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை உடனடியாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வசந்த முதலிகேயை கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வசந்தமுதலிகேயை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்துள்ளமைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டவேளை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

