அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படகுப்பாதையை புணரமைத்து தருமாறு கோரும் மக்கள்!

106 0

மட்டக்களப்பு வாவியை ஊடறுத்துச் செல்லும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் ஓடத்துறைப் படகுப்பாதையை புணரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்போக்குவரத்து மார்க்கத்தினூடாக விவசாயிகள், ஆசிரியர்கள், அரச, மற்றும் அரச சார்பற்ற, ஊழியர்கள், வியாபாரிகள் பொது மக்கள் எனப்பலரும் பயணம் செய்து வருகின்றனர்.இப்படகுப்பாதையானது தற்போது மிகவும், பழுதடைந்த நிலையில் சேவையிலீடுபடுவதனால் அதில் பயணம் செய்யும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிப்பதாக அங்கலாய்க்கின்றனர்.

இதேவேளை, இந்தப் படகுபாதையில் தூவரங்கள் காணப்படுவதோடு, துருப்பிடித்து நிலையில் உள்ள படகுப் பாதையை புணரமைத்து நவீன முறைப்படுத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக  நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.