இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் Soopika (22) என்னும் ஈழப்பெண் தங்கி வேலை செய்து வந்தார்.
அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்த 27 வயதான அகதியுடன் நட்புடன் இருந்துள்ளார்,
ஆனால் அந்த நபர் Soopikaவை பின் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சூபிகாவை மிரட்டிய அந்த நபர் ஒருகட்டத்தில் அவரை கழுத்து, தலை போன்ற பகுதியில் அடித்து கொலை செய்துள்ளான்.
பின்னர் அங்கிருந்து தப்பிய அவன் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ளான்.
அவர் மீது ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, சுவிஸ் பொலிசார் அவரை தற்போது அங்கு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.