ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு

186 0

திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தனவை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஜானகி சிறிவர்தன கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இவர் கோட்டை, கிறிஸ் கட்டிடத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.