தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்க நகைகளை வெருகல பாலத்துக்கு அருகில் தோண்டிக் கொண்டிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து ஸ்கேனர் உடபட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிரடிப்படையினர் சோதனைக்கு வருவதைக் கண்ட சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களை துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.