வவுனியா நெளுக்குளத்தில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடுதல்

191 0

போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா, நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையோடு விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா, நெளுக்குளம் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (நவ 4) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த விசேட சோதனை  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம் அதிகரித்துவந்துள்ள நிலையில், வவுனியாவிலும் போதைப்பொருள் தொடர்பான பல கைது நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து போதைப்பொருள் பாவனை, கடத்தல் மற்றும் விற்பனை என்பவற்றை கட்டுப்படுத்தும் வகையில் நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையோடு வீதியில் சென்ற பேருந்துகள், சொகுசு வாகனங்களை இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகத்துக்கிடமான இடங்களையும் நபர்களையும் பொலிஸார் சோதனைக்குட்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.