60 கிலோ கஞ்சா மீட்பு

108 0

யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் கடற்கரைநில் இருந்து 60 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்கரையில் இன்று காலை ரோந்து சென்ற இராணுவத்தினரே இவற்றை அவதானித்து கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இருந்து ஓர் இரகசிய படகு வருவதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இராணவத்தினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கையிலேயே மேற்படி 60 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.