இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 38 வகையான கண் வில்லைகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேசிய மருத்துவ அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
இதன் மூலம் கண் வில்லைகளை பொருத்துவதற்கான சத்திரசிகிச்சைக்கான கட்டணங்களும் குறைவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சகல நிறுவனங்களுடனும் கலந்துரையாடிய பின்னரே விலை ஒழுங்குறுத்தல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். எதிர் காலத்தில் மருந்துகளின் விலைகளையும் குறைக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுகாதாரம் என்பது வியாபாரம் அல்ல சேவை என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேசிய மருத்துவ அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.