எனக்கு அநீதி இழைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன: கோட்டாபாய

234 0

தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் பழிவாங்கள்களுக்கு நாட்டு மக்கள் உரிய நேரத்தில் தக்க பதில் கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று பொலிஸ் நிதிமோசடி விசாரணைபிரிவில் அவர் முன்னிலையாகியிருந்தார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அவன்காட் நிறுவனம் மற்றும் மிக் ரக விமான கொள்வனவு தொடர்பான மோசடிகள் குறித்து தம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனக்கு அநீதி இழைக்கும் நோக்கிலேயே இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

எவ்வாறாயினும், அநுராதபுரம் சந்தஹிருசேய புனித தளத்தில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து இன்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.