அரசாங்கம் குறித்து ஆரூடம் வெளியிட்ட நாமல்!

222 0

எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முகம் கொடுப்பதற்கு அரசாங்ம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டம் நாட்டிற்கு பொருத்தமானதல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வேலை செய்யும் மக்களுக்கு சாதகம் ஏற்படுத்தும் வகையிலான பொருளாதாரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு தெரிவித்திருந்தார்.