தாய் இறந்த சோகத்தில் தன்னுயிரை மாய்த்த மகன்

94 0

தாய் இறந்த சோகத்தில் மகனும் கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகி உள்ளது.

யாழ்ப்பாணம் – நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது – 32) என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர் மன்னார் மாவட்ட அரச திணைக்களம் ஒன்றின் அலுவலகர் ஆவார்.

இவரது தாயார் உயிரிழந்த நிலையில், தாயின் இழப்பினை தாங்க முடியாது விரக்தியுடன் காணப்பட்டவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துள்ளார்.