இலங்கையைச் சேர்ந்த படகு தமிழகம் தனுஸ்கோடிக்கு அப்பால் மீட்பு.

243 0

இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் தமிழகம் தனுஸ்கோடிக்கு அப்பால் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கண்ணாடி இழையிலான இந்தப்படகு குறித்த மீனவர்கள் வழங்கிய தகவல் அடிப்படையில், காவற்துறையினர் அதனை மீட்டுள்ளனர்.

18 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட இந்த படகில் ஓ.எப்.ஆர்.பி- ஏ 4044- என் பி ஓ என்ற பதிவு இலக்கம் பொறிக்கப்பட்டது.

அதில் இருந்து மீன்பிடி வலைகள், 10 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த படகு விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த படகு ஏதாவது கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.