கைதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் இலங்கையில்

298 0

கைதிகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் இலங்கையில் இன்னும் தொடர்வதாக சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

த கார்டியனுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ஜோன் மெண்டிஸ் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையில் தற்போதும் இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் சித்திரவதைகளை முற்றாக நீக்குவதற்கு மிகப்பரந்த அளவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.