இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்றைய தினம் (22) காலை கடல் மார்க்கமாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியை அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் தவித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து மரைன் பொலிசார் படகில் சென்று இன்று (22) காலை அவர்களை மீட்டு தனுஷ்கோடி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கமைய, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.

