யாழில் வயோதிபர்களிடம் கைவரிசையை காட்டும் திருடர்கள்!

225 0

யாழில் மூதாட்டி ஒருவரின் தங்க நகையை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிக்காமம் – சியாமளா மில் வீதியில் தனிமையில் இருந்த மூதாட்டியொருவரின் ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.