சொந்த கட்சிகாரர்களை தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பார்கள்: கே.பி முனுசாமி கண்டனம்

257 0

பதவி ஏற்ற ஒரு மணி நேரத்தில் சொந்தகட்சிகாரர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பார்கள் என்று கேபி முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீடு அருகே பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மீது  கலவீசி தாக்குதல் நடத்தப்பட்டது . இதை தொடர்ந்து நுற்றுகணக்கான போலீசார் குவிக்கபட்டு உள்ளனர்.இந்த கல்வீச்சில் கோவில்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவர் காயம் அடைந்தார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறும் போது பன்னீர்செல்வம் வீடு அருகே நின்று கொண்டு இருந்த அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 10 காரில் வந்து கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.இது குறித்து  முன்னாள் அமைச்சர் .கே.பி முனுசாமி கூறும்போது

பதவி ஏற்ற ஒரு மணி நேரத்தில் சொந்த  அ.தி.மு.க கட்சிகாரர்களையே தாக்கி உள்ளனர். இதற்கு நான்  உங்களை குற்றம் சாட்டவில்லை. இதற்கு காரணமான சசிகலா குடும்பத்தையே குற்றம்சாட்டுகிறேன். இது போன்ற அற்பதனமான வேலைகளில் ஈடுபடவேண்டாம். சொந்த கட்சிகாரர்களை தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பார்கள் என கூறினார்.