பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள தர்காவில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி

258 0

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுபி தர்காவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ளது செவான் நகர். இங்கு லால் ஷபாஸ் குவாலண்டர் தர்கா உள்ளது. இதில் மதகுரு சுபி சமாதி உள்ளது. இன்று மாலை இங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென ஒருவர், தான் உடம்பில் கட்டியிருந்த குண்டுகளுடன் தர்காவிற்குள் பாய்ந்தார். இதனால் வெடிகுண்டுகளுடன் அவர் வெடித்து சிதறினார். இதில் தர்காவில் இருந்தவர்கள் 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த ஐந்து நாட்களில் பாகிஸ்தானில் நடைபெறும் நான்காவது பெரிய தாக்குதல் இதுவாகும்.

புதன்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 7 பேர் பலியானார்கள். லாகூரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 13 பேர் பலியானார்கள்.