முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 25 பேர் காயம்

139 0

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று (15) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில்  இருந்து முகமாலை நோக்கி சென்றுகொண்டிருந்த மனிதாபிமான கன்னிவெடி அகற்றும் பிரிவினரின் பஸ் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி தள்ளியுள்ளது.

முகமாலையில் அமைந்துள்ள மனிதாபிமான கன்னிவெடி அகற்றும் நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றி வந்த பஸ் திரும்ப முற்பட்ட வேளையே சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் 15 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 10 பேருமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.