கிழக்கு மாகாண ஆளுநர் லாகுகல வைத்தியசாலைக்கு இன்று (12) விஜயம் செய்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அம்பாறை லாகுகல பிரதேச வைத்தியசாலையின் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.அங்கு வைத்தியசாலையைச் சுற்றி யானை வேலி அமைப்பதற்குத் தேவையான பணிகளை துரிதப்படுத்துமாறு ஆளுநர் உரிய அதிகாரிகளிடத்தில் பணிப்புரை விடுத்தார்.
மாகாண ஆளுநர் ஒருவர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்பதும் விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சாமர நிலங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.