மிரிஹான பிரதேசத்தில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை தொகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மிரிஹான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைத்தொகுதியிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.
பொலிஸார் மற்றும் மாநகரசபை தீயணைக்கும் குழுவினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு காவலாளியாக தொழில் புரிந்த முதியவர் ஒருவரே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 63 வயதுடையவராவார். தீப் பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.