சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விடுதலை

177 0

2012 ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி குற்றம்சாட்டப்பட்ட சாருவ லியனகே சுனில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பில் பி.குமரன் ரட்ணம் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 25,000 அபராதம் மற்றும் 250,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் விதிக்கப்பட்டது.