வடக்கில் யுத்தம் நடை­பெற்­ற­போது தெற்கில் துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார்

339 0

முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ  வடக்கில் யுத்தம் நடை­பெற்­ற­போது தெற் கில்  துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார். அவர் தெற்­கி­லேயே சண்­டித்­த­னத்தைக் காட்­டினார். ஆனால், யுத்தம் வடக்கில் நடை­பெற்­றது என்று  அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான    ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.  

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த  அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழு­ப­பிய கேள்­வி­க­ளுக்கு பத­லி­ளிக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர்  அங்கு மேலும்  குறிப்­பி­டு­கையில்:-

கேள்வி:  அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்கள் அதி­க­ரித்து செல்­கின்­ற­னவே?

பதில்: ஜன­நா­யகம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால்  ஆர்ப்­பாட்­டங்கள் நடக்கும்.  பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில்  வரு­டத்தில் 365 நாட்­களில் 362 நாட்கள் ஆர்ப்­பாட்­டங்கள் நடந்­தன. அது­மட்­டு­மன்றி கடந்த 9 வரு­டங்­க­ளாக ஆர்ப்­பாட்டம் செய்ய முடி­யாமல் கிடந்த மக்கள் தற்­போது  சுதந்­தி­ர­மாக  ஆர்ப்­பாட்டம் செய்ய ஆரம்­பித்­துள்­ளனர். தற்­போது சுதந்­திரம் இருக்­கின்­ற­மையின் கார­ண­மாக நன்­றாக ஆர்ப்­பாட்டம்  நடக்­கின்­றன. அக்­கா­லத்தில் வெள்­ளை­வேன்கள் வந்­தன தற்­போது இல்லை.

கேள்வி:- அப்­ப­டி­யாயின் நீங்­களும்  வெள்­ளைவேன் அனுப்­ப­வேண்டி வருமா?

பதில்:- தேவை­யில்லை. அதற்கு எத்­த­னையோ வழிகள் உள்­ளன.

கேள்வி: நீங்கள் கூறு­வதைப் பார்த்தால் முன்னாள் பாது­காப்பு செய­லாளர்  கோத்­த­பாய  சண்­டி­ய­ராக இருப்­பாரோ?

பதில்:- அவர் சண்­டி­யர்தான். ஆனால்  வடக்கில் யுத்தம் நடை­பெற்­ற­போது கோத்­த­பாய தெற்கில்  துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார்.  அவர்  தெற்­கி­லேயே சண்­டித்­த­னத்தைக் காட்­டினார். ஆனால் யுத்தம் வடக்கில் நடை­பெற்­றது.

கேள்வி:- வடக்கு யுத்­தத்தில் அவர் பங்­க­ளிப்பு செய்தார் தானே?

பதில்:-  ஒரு குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை செய்தார். ஆனால் அவர்  தெற்­கி­லி­ருந்­துதான் அதனை செய்தார்.  களத்­தி­லி­ருந்து பொன்­சேகா, கரன்­கொட போன்­ற­வர்­களே செயற்­பட்­டனர். அது­மட்­டு­மன்றி நாட்டு மக்­க­ளையும்  சர்­வ­தே­சத்­தையும் நாங்­களே தெளி­வு­ப­டுத்­தினோம்.  எனவே அனை­வரும்  இதில் பங்­க­ளிப்பு செய்­தனர்.

கேள்வி: கருணா அம்மான் தனிக்­கட்சி தொடங்­கி­யுள்­ளாரே?

பதில்: நல்­லது ஆயிரம் பூக்கள் மல­ரட்டும்.

கேள்வி: ஏன் அப்­படி கூறு­கின்­றீர்கள்?

பதில்: அவ்­வாறு தான் அனை­வரும் கூறு­கின்­றனர்.

கேள்வி: ஹொர­னையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள  டயர் தொழிற்­சா­லையில்  உரி­மை­யாளர் யார் என்­பதை  அறி­யா­ம­லேயே  பிர­தமர்   திறப்­பு­வி­ழா­விற்கு சென்­ற­தாக  நீங்கள் கூறி­னீர்கள் ஆனால்  அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம மறுத்­துள்­ளாரே?

பதில்: நான் கூறி­யது சரி­யென மீண்டும் கூறு­கின்றேன்.

கேள்வி: அப்­ப­டி­யாயின்    பிரதமர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளாரா?

பதில்:- நிச்சயமாக தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்.

கேள்வி: நீங்கள் மலிக் சமரவிக்கிரமவை  குற்றஞ்சாட்டுகின்றீர்களா?

பதில்;-  எமது நாட்டின் ஊடகவியலாளர்கள் புத்திசாலிகள், அவர்கள் எளிதில்  விடயங்களை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.