மே 9 வன்முறையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

102 0

நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் சனிக்கிழமை (ஒக் 8) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி மற்றும் அலவ்வ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார ஆகியோரின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் அவற்றுக்கு தீ மூட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் 21 மற்றும் 24 வயதுடைய கண்டி மற்றும் மஹரவவிமுல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.