அரகலயவில் ஈடுபட்டவர்கள் புனர்வாழ்விற்குட்படுத்தப்படுவார்களா?

86 0

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரகலயவில் ஈடுபட்டவர்கள் புனர்வாழ்விற்கு அனுப்பப்படும் ஆபத்துள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்  அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் தொலைக்காட்சி நிகழ்வொன்றில்அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு என்ற போர்வையில் தன்னுடன் உடன்படாதவர்கள் மாற்றுக்கருத்துடையவர்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதியை இந்த சட்டமூலம் அரசாங்கத்திற்கு வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பணியகம் அதன் நோக்கங்கள் குறித்து அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது சில மாதங்களிற்கு முன்னர் அரகலயவில் ஈடுபட்டவர்களிற்கு ஆபத்துள்ளது என கருதலாமா?

பதில்- ஆம் நிச்சயமாக ஏனென்றால் அது வேறு எந்த குழுக்களையும் சேர்ந்த நபர்கள் என குறிப்பிடுகின்றது மேலும் வன்முறை தீவிரவாதம் என்பது எங்கள் நாட்டில் சரியான விதத்தில்  வரைவிலக்கணப்படு;த்தப்படவில்லை,ஏன் பயங்கரவாதம் என்றால் என்னவென்பதற்கு கூட சரியான விளக்கம் இல்லை இதன் காரணமாகவே அவர்களால் பயங்கரவாத தடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்ய முடிகின்றது.

ஆகவே அவர்கள் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றினார்கள் என்றால் அரகலயவில் ஈடுபட்டவர்கள் புனர்வாழ்;விற்கு அனுப்பப்படும் ஆபத்துள்ளது.

இரண்டாவது விடயம் ஏன் அவர்கள் போராளிகள் என குறிப்பிடுகின்றனர்.13 வருடங்களாகிவிட்டது – மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கமும் மிகவும் பெருமையுடன் தாங்கள் 12000 பேரை புனர்வாழ்விற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன.

அந்த புனர்வாழ்வு என்பது கூட சர்வதேச தராதரத்திற்கு ஏற்றதாக இல்லை.

ஆகவே நான் என்ன தெரிவிக்க வருகின்றேன் என்றால் இது புதிய விடயமல்ல தொடரும் ஒரு விடயம் தொடர்ச்சி.

இது முன்னாள் போராளிகள் என தெரிவிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுடன் ஆரம்பமானது,அந்த நிலையங்கள் பின்னர் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையங்களாக 2013 மாற்றப்பட்டன- அங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன,இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது அதன் பின்னர் அவர்கள் தீவிரவாத மயப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான சட்டத்தை கொண்டுவந்தார்கள், தற்போது இந்த மூன்றையும் புனர்வாழ்வு பணியகம் என்ற ஒன்றிற்குள் கொண்டுவருகின்றார்கள்.அவர்கள் ஒவ்வொரு செங்கல்லாக இதனi கட்டியெழுப்பியுள்ளனர்.

கட்டாய போதைப்பொருள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் பலனளிப்பதில்லை இது  ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது,இலங்கையிலும் நாட்டிற்கு வெளியேயும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஏனைய ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளன. மேலும் இது ஒரு மனித உரிமை தராதரங்களை மீறும் நடவடிக்கை.

இலங்கையில் இன்னமும் கட்டாய போதைப்பொருள் புனர்வாழ்வு நடவடிக்கை என்பது காணப்படுகின்றது- உங்களிற்கு என்ன அவசியம் என்றால் சுகாதார மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட அணுகுமுறையாகும்.

மேலும் சுயவிருப்பத்துடன் அவர்கள் தங்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவது அவசியம் அவ்வாறான வழிமுறை மூலமே நீங்கள் அவர்களிற்கு உதவுகின்றீர்கள்

 

கேள்வி – புனர்வாழ்வு பணியகம் என்பது ஒரு முன்னோக்கி நடவடிக்கை இல்லையா?

பதில்- தற்போது இலங்கையில் பல கட்டாய போதைப்பொருள்  புனர்வாழ்வு நிலையங்கள் உள்ளன – இவற்றை  இராணுவம் நிர்வகிக்கின்றது – அங்கு அவர்கள்  கட்டாய புனர்வாழ்விற்கு உட்;படுத்தப்படுகின்றனர்  அங்கு அவர்கள் நாளாந்த வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதுவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது நான் கடந்த வருடம் அறிக்கையொன்றை வெளியிட்டேன்.இந்த நிலையங்களிற்கு சென்றவர்களை நேர்காணல் செய்த பின்னரே நான் அதனை வெளியிட்டேன்.

ஆகவே அதுவே தற்போது காணப்படுகின்றது.

எங்கள் அமைப்புமுறை அதிகளவிற்கு செயல் இழந்துவிட்டதாகவும் துஸ்பிரயோகம் மிக்கதாகவும் காணப்படும்போது – நீங்கள் வன்முறை தீவிரவாதம் அல்லது வேறு எந்த நபரையும் புனர்வாழ்விற்கு உட்;படுத்தலாம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தும்போது  இது என்ன செய்கின்றது என்றால் – புனர்வாழ்வு என்ற போர்வையில் தன்னுடன் உடன்படாதவர்கள் மாற்றுக்கருத்துடையவர்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதியை இது அரசாங்கத்திற்கு வழங்குகின்றது.

தாங்கள் விரும்பியவர்களை தன்னிச்சையாக தடுத்துவைப்பதற்கான அனுமதியை இது அரசாங்கத்திற்கு வழங்குகின்றது.

 

கேள்வி – உத்தேச சட்டமூலம் வெளிப்படையாக இராணுவமயப்படுத்தல் குறித்து குறிப்பிடுகின்றதே – இந்த சட்டங்களின் கீழ் முப்படையினரும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து இது குறிப்பிடுகின்றது?

பதில்- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் ஒருபோதும் இராணுவமயப்படுத்தலிற்கு எதிராக குரல்கொடுக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தி;ன் கூட அவர்கள் இராணுவமயமாக்கலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடவில்லை.

இவ்வாறான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன அல்லது தளர்வு காணப்பட்டது

கேள்வி – சில முயற்சிகள் எடுக்கப்பட்டனவே?

பதில்- வடக்குகிழக்கிற்கு நீங்கள் சென்றால் இராணுவ புலனாய்வாளர்கள் சிவில் சமூகத்தினரை கண்காணிப்பது  அச்சுறுத்துவது  போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்தவில்லை.

நான் மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்தவேளை எங்களிற்கு தொடர்ச்சியாக அறிக்கைகள் வந்தன.

நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது இடம்பெற்றது நான் அவ்வேளை முல்லைத்தீவிற்கு செல்லும்போது அவர்கள் இன்னமும் இராணுவம் நிலங்களை ஆக்கிரமித்தல்,திருகோணமலையில் கடற்படை, இவை அனைத்தும் தொடர்ந்தன ஏனென்றால் அது அமைப்பு முறையின்  ஒரு பகுதியாக மாறிவிட்டது – ஆழமாக வேர் ஊன்றிவிட்டது நீங்கள் இதனுடன் தொடர்புபட்ட ஒருவரை அகற்றினாலும் அமைப்பு முறை தொடர்ந்தும் அதேவிதத்தில் இயங்கும்.