அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை

118 0

இந்த நேரத்தில் வெளிநாட்டு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும், உள்ளூர் விவசாயியே உயர்தர அரிசியை உற்பத்தி செய்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதன் மூலம் உள்ளூர் விவசாயி அதிக விலையைப் பெற முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

அத்துடன் நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் நெல்லைக் கொள்வனவு செய்ய பணம் இல்லை எனவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.