உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை

68 0
உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய சரத் ஜயந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து தனது கடமையை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் வீட்டிற்கு சென்றுள்ள நிலையிலேயே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே உப பொலிஸ் பரிசோதகர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார் என மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்த நிலையில் கடந்த வருடம் உடப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.