கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

104 0

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகொட பிரதேசத்தில் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மூவருடன் விலங்குகளை வேட்டையாடச் சென்ற குறித்த நபர், மெதகொட பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மெதகொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.