யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து நகைகள் திருட்டு!

166 0

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து குறித்த வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர்.

சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த குடும்பம் ஒன்று உரும்பிராய் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்துள்ளனர்.

அவர்கள் 29 ஆம் திகதி வியாழக்கிழமை ஆலயம் ஒன்றுக்கு சென்றிருந்த வேளை, வீட்டின் கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.