நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது: போயஸ் கார்டனில் சசிகலா பேச்சு

269 0

நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் வந்த சசிகலா செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் இன்று காலை உறுதி செய்தது. நீதிபதி குன்ஹா அளித்த தண்டனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு சென்னை அடுத்த கூவாத்தூரில் தங்கியிருந்த சசிகலாவுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில், சென்னை கூவத்தூரில் இருந்து புறப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நேற்சுறு சுமார் இரவு 11 மணியளவில் போயஸ் கார்டன் வந்தடைந்தார்.

போயஸ் கார்டனில் சசிகலா செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது சசிகலா பேசியதாவது:-

அனைவரும் தைரியமாக இருங்கள். அதிமுக தமிழகத்தை என்றும் ஆள வேண்டும். நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. என் இதயத்தில் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது.

கட்சியை தொடங்கிய அண்ணாவை போல், எதையும் தாங்கிக் கொள்ளும் இதயம் தமக்கு உண்டு. எங்கிருந்தாலும் கட்சியை கண்காணிப்பேன், மக்கள் நலனில் அக்கறை செலுத்தி உங்கள் பயணத்தை தொடர வேண்டும்.இவ்வாறு கூறினார்.தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், சசிகலா நாளை சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.