விருந்துக்குவருமாறு அழைத்து கணவன், மனைவி மீது தாக்குதல்- மனைவி பலி, கணவன் உள்ளிட்ட இருவர் காயம்

84 0

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (23)பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது இருவர் காயமடைந்துள்ளதாக கிடைப்பெற்ற முறைபாட்டிற்கு அமைவாக பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பெண்ணின் நண்பர் ஒருவரினால் குறித்த தம்பதியை விருந்திற்கு அழைப்பதாக குறிப்பிட்டு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

பின்னர் குறித்த பெண் மற்றும் அவரது கணவர் உட்பட இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று  பொருபனபாலத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் குறித்த இருவர் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதன் போது காயமடைந்த பெண், பெண்ணின் கணவர் மற்றும் தாக்குதலை மேற்கொண்ட நபர்  களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 34 வயதுடைய ஒருவர் எனவும் அவர் விகாரை வீதி, பொரலஸ்கமுவ பிரதேசத்தை ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள் .