மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பு

243 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 442 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு தொடர்பில் இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் நேற்று முன்தினம்  சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது 752 வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளன.
டெங்கு நுளம்பு குடம்பிகள் இனங்காணப்பட்ட 20 வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதுடன், 27 இடங்களில் எச்சரிக்கை அறிவித்தல்களும் ஒட்டப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.