வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார திணைக்களம் தகவல்

254 0
வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் எனப்படும் எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னிப்பகுதியி் கடந்த வாரம் இனம் கானப்பட்ட எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் உள்ளானமை சுகாதார ஆராச்சிக் கழகத்தின் அறிக்கை மூலம்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வைரஸ் தாக்கமாக இருக்கலாம் என கருதப்பட்ட மேலும் 3பேரின் இரத்த மாதிரிகள் கிளிநொச்சி  பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக மருத்துவ ஆராச்சிக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்டவரில் 30 வயதையுடைய ஆணிற்கு குறித்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தனர். இதேவேளை ஏற்கனவே மூவர் இனம் கானப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.