வடக்கு முதல்வரை சந்திக்கவுள்ள முக்கிய தூதுவர்கள்

312 0
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் நாளை முதல் எதிர்வரும் 17ம் திகதி வரையில் வட மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்டப் பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் என்பன முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பார்வையிடவுள்ளனர்.
அத்துடன் 15ம் திகதி அவர்கள் வடக்கு முதல்வரை சந்தித்து வடமாகாணத்தின் நிலவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.