யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் எலிசபெத் மகாராணிக்கு நினைவேந்தல்

159 0

மறைந்த 2ஆம் எலிசபெத் மகாராணிக்கு யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் (19.09.2022)  நடத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீட சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி கலந்துகொண்டு எலிசபெத் மகாராணியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி உரையினையும் ஆற்றியுள்ளார்.

 

எலிசபெத் மகாராணியின் நினைவஞ்சலி

இதில் யாழ். நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரியின் அதிபர் எஸ்.விஷ்ணுவரதன், கல்லூரி சமூகத்தினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery