மர்மமான முறையில் உயிரிழந்த பௌத்த பிக்கு

83 0

சீதுவ பிரதேசத்தில் மர்மமான முறையில் விஹாரைக்குள் உயிரிழந்திருந்த பௌத்த பிக்குவின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வெந்தேவ ரத்தொழுவ ஸ்ரீ நந்தாராம விஹாரையின் விஹாராதிபதி நெடகமுவே மாநாயக்க தேரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த விஹாரையில் இருந்த மற்றொரு பௌத்த பிக்கு காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.