தம்மையும் கைதுசெய்வார்கள் – எதிர்வுகூறுகிறார் மஹிந்த

544 0

Mahinthaபுரவசி பலய என அழைக்கப்படும் மக்கள் சக்தி இயக்கம் டொலர்களுக்காக வேலை செய்யும் இயக்கம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள தனது புதல்வரான நாமல் ராஜபக்சவை நேற்று சந்தித்த பின்னர் செய்தியாhளர்களிடம் இந்தக்கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்சவும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும் என்று மக்கள்; சக்தி அமைப்பின் தலைவர் காமினி வியாங்கொட தெரிவித்திருந்த கருத்து தொடர்;பிலேயே மஹிந்த தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
தனது மனைவி சிராந்தி ராஜபக்சவை மாத்திரம் அல்ல, தம்மையும் கைதுசெய்வார்கள் என்றும் மஹிந்த எதிர்வுகூறியுள்ளார்.