ஐந்து பேருக்கு தலா 50,000 ரூபா தண்டப்பணம்

184 0

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய 05 பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர்  வாகனம் மற்றும் உழவு இயந்திரங்களில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றியோரை கைது  செய்த பொலிஸார் இன்று  கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் முன்னிலைப் படுத்தியிருந்தனர்.

இதில், ஐந்து பேருக்கும்   ஐம்பதாயிரம்  ரூபாய் தாண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன்  அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி  டிப்பர் வாகனத்தில் மணல் கொண்டு சென்ற ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது