பிரசன்னவின் அமைச்சில் ஊழல்?? விசாரணைக்கு பணிப்பு !

82 0

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்காய்வு செய்ய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

குறித்த அமைச்சின் கீழ் உள்ள 21 நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை சில வழக்குகள் விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.